Sunday, May 29, 2016

சகாய அன்னையின் வரலாறு.

சகாய அன்னையின் பக்தியும் வரலாறும்


            இரக்கத்தின் அரசியாம் அன்னை மரியாள்மீது நாம் வைக்கும் நம்பிக்கை பெரிதாக இருக்க வேண்டும். மகன் ஓர் அரசன் என்றால், அவரைப் பெற்றெடுத்த அன்னை அரசி என்னும் ஆட்சிக்குரியவள் என்றும் நியாயப்படியும் உண்மையிலும் கருதப்பட தக்கவரே என்று புனித அத்தனாசியார் கூறுகிறார். திருச்சபையும் அன்னையை அரசி என்ற உன்னதப் பெயரால் மகிமைப்படுத்துகிறது. புhவிகளை மன்னிப்பதில் மட்டுமல்ல துன்ப துயர வேளைகளில் அவளது அருளையும் துணையையும் வேண்டும்போது பரிவுடன் ஏற்றுஅரவணைத்து காத்து வருவதால் இரக்கத்தின் அரசி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறாள். கத்தோலிக்கருக்கு மட்டுமல்ல அனைத்துமக்களுக்கும் அவள்தாயாக விளங்குகிறாள். சிலுவையடியில் தூயயோவானுக்கு இதோ உன் தாய் என்று கூறிய நேரமுதலே எல்லா மனிதருக்கும் தாய் ஆனாள். இதோ இந்நாள் முதல் எல்லா தலைமுறையினரும் என்னை பேறுடையாள் என்று போற்றுமே என்றுமரியா கூறியது நிறைவேறிக்கொண்டேயிருக்கிறது.
சகாய அன்னையின் திருநாள் திருத்தந்தை 7ம் பயஸ் (7ம்பத்திநாதர்) என்பவரால் தொடங்கப்பட்டது. அதன் வரலாறு பின்வருமாறு நிகழ்ந்தது. அன்று மேல்திசை நாடுகள் எல்லாம் நடுங்கி ஒடுங்கிக் கொண்டிருந்தன. மக்கள் அழிவின் வாசலிலே தாங்கள் நிற்பதாக எண்ணி கொலை நடுக்கம் கொண்டனர். கிறிஸ்தவ நகரமே ஆட்டங்கண்டது. ஆம் துருக்கியரின் படையெடுப்பாலும் அவர்களது போர் திறமையாலும் வெற்றிமேல் வெற்றிச்சூடி நாடுகளையெல்லாம் சூறையாடி தன் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கி முன்னேறிக் கொண்டு வந்ததால் அவைகளை கண்டவர்கள் நிலைகுலைந்து விட்டனர். கடலிலே கப்பலோடு கப்பல் மோதின. கடும் போர், லெப்பாந்தோ கடலில் தொன் ஜூவான் தளபதியின் படைகளுக்கும் துருக்கியப் படைகளுக்கும் பெரும் போர் மூளவே யாருக்கு வெற்றி என்ற தவிப்பும், எதிரியின் எண்ணற்ற வீரர்களையும் அவர்களின் பலத்தையும் கண்ட கிறிஸ்துவ உலகத்தினர் சொல்லொண்ணா துன்பம் அடைய கண்ணீர் கண்களிலே மல்க கன்னிமரியின் அபயம் தேடி கைவிரித்து வேண்டினர்.
அந்த அவல நேரத்தில் கன்னிமரி அபயம் அளித்தாள். எதிரிகளுக்கு சாதகமாக வீசிய காற்று திடீரென அற்புதவிதமாக கிறிஸ்தவ போர் வீரர்களுக்குத் துணையாக திசைமாறி வீச கப்பல்கள் மோதி சிதறின.தீப்பற்றியெரிந்தன. கிறிஸ்துவ படை துருக்கியரை துரத்தி முறியடித்து வெற்றி வாகை சூடியது. காப்பாற்றிய தாய்மரியை புகழ்ந்தேற்றினர்.
பரிசுத்த திருத்தந்தை 5ம் பத்திநாதரோ தாய்மரி செய்த தன்னிகரற்ற செயலுக்கு நன்றியறிதலாக கிறிஸ்தவர்களின் சகாயமானபுனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வேண்டுதலால் 'லொரெட்டோ' மன்றாட்டு மாலையில் சேர்த்து மகிழ்ந்தார். இவையனைத்தும் கி.பி. 1571ம் ஆண்டிலே நிகழ்ந்தன. ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் மேல்நாட்டின் வரலாற்றிலே மாபெரும் மாற்றம். மக்களுக்கோ பெரும் ஏமாற்றம் நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக நெப்போலியனின் காலடிகளிலே விழுந்தன. ஐரோப்பா கண்டத்தையே ஆட்டிப்படைத்தான். அன்று திருமறைத் தலைவராக விளங்கிய 7ம்பத்திநாதரை தன் கைப்பாவையாக்க முனைந்தான். தன்னை ஐரோப்பிய பேரரசனாக பிரகடணப்படுத்தினான். நெப்போலியனின் ஆணைக்கிணங்க திருத்தந்தை 7ம்பத்திநாதரை ஜீலை 5 1808 அன்று கைது செய்து மூன்று வருடகாலமாக சவோனா என்னுமிடத்தில் சிறையில் அடைத்து வைத்திருந்தான். 1814ம் ஆண்டு ஜனவரி மாதம் லேபிஸ் போருக்குப் பிறகு அவரை சவோனாவின் பாதுகாவலியான இரக்கத்தின் அன்னையின் திருவிழா நாளான மார்ச் 17ம் தேதி அன்று விடுதலை செய்தார்கள்.
அங்கிருந்து திருத்தந்தை ரோமிற்கு வெற்றி பயணம் மேற்கொண்டார். அவர் திருச்சபையின் பல இன்னல்களுக்கு பிறகு கிடைத்த இந்த மகத்தான வெற்றியை பறைச்சாற்றும் விதமாக அவர் செல்லும் வழிகள் தோறும் இருந்த தேவ அன்னையின் திரு உருவ சுருபங்களுக்கு கிரீடங்கள் அணிவித்தார். நெப்போலியனை தைரியமாக எதிர்கொண்டு வெற்றிப்பெற்ற திருத்தந்தையைக் காண மக்கள் திரளாக வீதிகளில் கூடினர். மே 24 1814 அன்று ரோம் நகரத்தினுள் வந்த தந்தையை உற்சாகமாக வரவேற்றனர். தானும், திருச்சபையிலுள்ள மற்றவர்களும் அடைந்த துன்பத்தை நினைவுக்கூறும் வகையில் வியாகுல அன்னை திருவிழாவை செப்டம்பர் 18 1814ம் ஆண்டு கொண்டாடினர். கடவுளுக்கும் அன்னை மரியாவுக்கும் நன்றி செலுத்தும் விதமாக செப்டம்பர் 15ம் நாள் 1815அன்று ரோம் நகரத்தில் சகாயஅன்னையின் திருநாளை மே 24ம் நாள் அன்று கொண்டாடவேண்டும் என்று உறுதிப்படுத்தினார்.
புனித தொன் போஸ்கோ உருவாக்கிய சலேசிய சபையின் தலைவியும் பாதுகாவலியுமான கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் பக்தி முயற்சிகளும் மரியாளின் மீது விசுவாசமும் 345ம் ஆண்டிலிருந்தே பின்பற்றி வருகிறது. (saint John Chrysostom)என்பவர் முதன் முதலில் மரியாளின் பக்தியை கிறிஸ்தவர்களின் சகாயியான மரியாள் என்ற பெயரில் ஆரம்பித்தார். இதனையே புனித தொன் போஸ்கோ அவர்களும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னை என உலகிற்கு பறைசாற்றினார். அதுமட்டுமல்லாமல் இத்தாலியின் தூரின் நகரத்திலே கிறிஸ்தவர்களின் சகாய அன்னைக்கு பேராலயம் ஒன்றை கட்டினார்.

ANITO C. DHAS

Friday, May 27, 2016

வாழ்த்தலாம் வாங்க!!

சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில், நமது ஊரைச் சார்ந்த பால் அண்ணன் மகள் 500 மதிப்பெண்ற்கு 490 மதிப்பெண் எடுத்திருக்கிறாள் என்று வாட்ஸ்அப் லில் தெரிவித்த போதே எனக்கு ஒருவித பெருமிதம் முகத்தில் மிளிர்ந்தது. காரணம் இன்றைக்குப் பெரு நகரங்களில் உள்ள பள்ளிகளில் படிப்பவர்கள் தான் அதிக மதிப்பெண் வாங்க முடியும் என்ற மாயைக்குச் சிக்கியிருக்கும் மக்களின் நடுவில் நமது கிராமங்களில் உள்ள பள்ளியிலும் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று நிரூபித்த மாணவி அஸ்னி க்கு நமது பண்டாரக்காடு வாட்ஸ்அப் நண்பர்கள் குழுமம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!!

                                               மாணவியின் பெயர்: பி.அஸ்னி
                                               தந்தையின் பெயர்: பி.பால் ததேயுஸ்
                                               தாயின் பெயர்: கே.ஆர்.பிரபா



நமது கல்வியின் நீண்ட பயணத்தில், நமக்கு அடித்தளம் அமைத்து நம்பிக்கையைக் கொடுத்து தொடர்ந்து முன்னேற வாய்ப்பைக் கொடுப்பது அரசால் நடத்தப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள். அதில் நாம் சிறப்பாக செயல் படும் போது, தொடர்ந்து எதை நோக்கி நாம் பயணிக்க போகிறோம் என்பதற்கான வழி தெளிவாக புலப்படுகிறது. மாணவி அஸ்னி யின் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு நனவாகக் கண்டிப்பாக இந்த வெற்றி அவருக்கு அடித்தளமாகவும் ஊக்கமாகவும் அமையும்.

இந்த வெற்றியைப் பற்றி மாணவி அஸ்னி கூறும் போது, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் விடா முயற்சியோடு படித்தேன், அதை இந்த முறை தவறவிட்டாலும் பிளஸ் டூ தேர்வில் சாத்தியம் ஆக்குவேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது, அதற்கு இதுவரையிலும் என்னுடன் உறுதுணையாக இருந்த என் பெற்றோர்கள் வழிகாட்டுவார்கள். இந்தத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்கு உதவியாக இருந்த ஆட்லின் மெட்ரிக் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

வாங்க மக்கா!! நம்ம ஊர் பொண்ணு நல்ல மார்க் எடுத்திருக்கா!! ஒண்ணும் சொல்லாம போனா எப்படி??

வாழ்த்திருவோம்!!


.

Sunday, May 22, 2016

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய வரலாறு

தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி

தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம்வேளாங்கண்ணிதமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. அம்மூன்று புதுமைகள்: இடைய சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது, போர்த்துகீச மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது.
இவ்வாலய விழாநாள் கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்த புதுமை நடந்த நாளுமான செப்டம்பர், 08 ஆகும். இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.
அன்னை மரியா

இயேசுவின் தாயான மரியா, உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே தோன்றி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தோன்றிய இடங்களின் பெயரால்லூர்து மாதாபாத்திமா மாதா, குவாடலூப்பே மாதா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். உலகின் பல இடங்களில் தோன்றிய அன்னை, இந்தியாவில் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் காட்சி அளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார். வேண்டுதல் செய்யும் அனைவரின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால் ஆரோக்கிய அன்னையாக திகழ்கிறார்.
பால்க்கார சிறுவன்


அன்னை மரியா, பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் நாகப்பட்டினம் அருகே உள்ள வேளாங்கண்ணியில் காட்சி அளித்தார். வேளாங்கண்ணி என்றால் விவசாய நிலம் என்று அர்த்தம். இங்கு இருந்த குளத்தைச் சுற்றி வேளாண்மை நடந்தது. அந்த காலகட்டத்தில், பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற இந்து சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி, தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார். அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அவன் குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான். பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மிகவும் ஆசைப்பட்டனர். அன்னை காட்சி அளித்த இடத்தில் மக்கள் கூடி செபிக்கத் தொடங்கினர். பலரும் தங்கள் துன்பங்கள் தீர உதவுமாறு அன்னை மரியாவிடம் வேண்டிக்கொண்டனர்.
மோர் விற்ற சிறுவன்

தனது மகனுக்காக மனதுருகி செபித்த ஒரு தாயின் வேண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் மரியன்னை மீண்டும் காட்சி அளித்தார். நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவனுக்கு அன்னை மரியா தோன்றினார். `மகனே, எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல்' என்ற அன்னையின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் அதிர்ந்து போனான். `அம்மா, என்னால் எப்படி நடக்க முடியும்?' என்றான் சிறுவன். `உன்னால் முடியும்' என்றார் அன்னை. அவன் எழுந்தான், நடந்தான், அங்கு ஓடத் தொடங்கியவன் செல்வந்தரின் வீட்டில் போய்தான் நின்றான். அன்னையின் புகழ் சுற்றுப் புறமெங்கும் பரவ, அன்னை செல்வந்தருக்கு காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது.
போர்ச்சுக்கீசியர்கள்

அந்த காலத்தில், இந்தியாவுக்கு பாய்மரக் கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் சிலர் நடுக் கடலில் வீசியப் புயலில் சிக்கிக் கொண்டனர். என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த அவர்கள், அன்னை மரியாவிடம் உதவி கேட்டனர். `அம்மா, நாங்கள் கரை சேரும் இடத்தில் உமக்கு ஒரு ஆலயம் கட்டுவோம்' என்றும் வாக்குறுதி அளித்தனர். மரியன்னையின் உதவியால் புயல் அடங்கி கடல் சீற்றம் ஓய்ந்தது. கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை இறங்கினர். அன்று செப்டம்பர் 8ந்தேதி, தேவமாதாவின் பிறந்த நாள். தங்களை பத்திரமாகக் கரை சேர்த்த அன்னைக்கு நன்றியாக, வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். கலை வண்ணமிக்க பீங்கான் ஓடுகளால் ஆலயப் பீடத்தை அலங்கரித்தனர். தங்கள் கப்பலின் பாய்மரத் தூணை ஆலயக் கொடிமரமாக நட்டினர். அதில்தான் இன்றளவும் அன்னையின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. போர்ச்சுக்கீசியர்கள் கரை சேர்ந்த நாளான மாதாவின் பிறந்த நாளிலேயே வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் வளர்ச்சி

தொடக்கத்தில் நாகப்பட்டினம் கிறிஸ்தவப் பங்கின் துணை ஆலயமாக வேளாங்கண்ணி இருந்து வந்தது. 1771ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் திருத்தலமாக மாறியது. இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில்திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வேளாங்கண்ணி திருத்தலக் கோவிலை 1962 நவம்பர் 3ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.

 ANITO C. DHAS

Friday, May 20, 2016

தேர்தலில் வாக்களிக்காதவர்கள் அயோக்கியர்களா?

தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிந்துவிட்டது. இந்தத் தேர்தல் வாக்கிற்கு அதிகம் பணம் கொடுத்தவர்கள் அரியணையை ஏறுபவர்களாகவும், குறைவாக பணம் கொடுத்தவர்கள் மண்டப படிகளில் இருப்பவர்களாகவும், பணம் கொடுக்காதவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது. தேர்தலில் வாக்களித்தவர்கள் அனைவரும் ஜனநாயக பரிசுத்தவான்கள் போலவும், வாக்களிக்காதவர்கள் அனைவரும் ஜனநாயக நாட்டில் பாவிகள் என்பது போலவும் ஊடகங்கள் கட்டியெழுப்புகின்றன. அதிலும் குறிப்பாக, வாக்கு சதவீதம் குறைவாகப் பதிவான கன்னியாகுமரி மற்றும் சென்னையை குறிவைத்து, படித்தவர்களுக்கு ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து என்று அமிலத்தை வீசுகிறார்கள். எது நம்முடைய ஜனநாயகத்தில் கேலிக்கூத்து என்பதைக் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.



தேர்தல் பரப்புரைகள் தொடங்கிய நாள் முதல், தினந்தோறும் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி ஒரு சிறு விசாரணையாவது நடத்தப்பட்டதா? எவருடைய பணம்? எந்தக் கட்சி வேட்பாளரால் கொண்டுவரப்பட்டது? அந்த பணத்திற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்பது பற்றி முழுமையான தகவல்களை இந்த மக்களுக்குக் கொண்டு சென்றனவா? இன்றைக்குத் தேர்தல் ஜனநாயகம் பற்றி பேசும் ஊடகங்கள். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பணம் இந்தமுறை தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது.

யாரால், எந்தத் தொகுதிக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற புள்ளிவிவரம் உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கே தெரிகிறது என்றால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் கொண்டு நடத்தப்படும் தேர்தல் ஆணையத்திற்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும். பணம் பட்டுவாடா, லாட்ஜில் மூட்டை மூட்டையாய் பணம், கண்டெய்னரில் பிடிபட்ட பணம், லாரியில் கொண்டுசென்ற பணம் என்று தேர்தலே அம்மணமாய் கிழிந்து தொங்கும் போது, இரண்டு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து! என்று அறிவித்து ஒட்டு போடும் வேலையைத் தேர்தல் ஆணையம் செய்யும் போது வராத கோபம் வாக்களிக்காதவன் மீது வருவது வியப்பே!



ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்று வந்துவிட்டது, எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தமுறை ஆறுமுனை போட்டி என்றெல்லாம் ஊடகங்களில் நீட்டி முழங்க வேண்டுமானால் இந்தக் கட்சிகள் உதவும், ஆனால் மக்களின் நலன் சார்ந்து உண்மையில் முழுமையான மாற்றம் கொண்டுவர ஏதேனும் கட்சிகள் வந்ததா? என்றால் ஏமாற்றமே!, நான்கு கட்சிகள் சேர்ந்து ஒரு அணியாகத் திரண்டு முழுமையாக ஒரு வருடங்கள் முழுமையடையவில்லை, இந்த நால்வரும் முந்தைய தேர்தல்களில் இரண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தவர்கள். அதனுடன் ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் பேரம் பேசிய விஜயகாந்த் கட்சி மற்றும் பெரிய கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமாக(வாசன்) இவர்கள் தான் மூன்றாவது அணி. மதவாதம் பேசும் தேசிய கட்சி, சாதி வெறியை வளர்க்கும் மாற்றம் முன்னேற்றம் கட்சி மற்றும் இனவாதத்தைத் தூண்டும் தமிழர் கட்சி இவர்கள் தான் உங்களுக்குத் தேர்தலில் மாற்றத்தை முன்வைத்தவர்கள். இருக்கிற கொள்ளியில் நல்ல கொள்ளியை எடுத்து தலையில் வைத்துக்கொள் என்பது போல் தான் இந்த மாற்றுக் கட்சிகள், அப்படி வைக்காதவனைக் காறி உமிழ்வது அபத்தத்தின் உச்சம்.

இவ்வளவு வக்கணையாய் பேசுகிறவன் வந்து நோட்டாவிற்கு ஒட்டு போட வேண்டியது தானே என்று நீங்கள் கேட்டால் அதைவிட நகைச்சுவை எதுவும் இல்லை. இந்த நோட்டாவிற்கான முழுமையான அதிகாரம் என்ன என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையம் 100 சதவீத ஓட்டுப் போட சொல்லி மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து விளம்பரம் செய்கிறது, ஆனால் தகுதியான வேட்பாளரை மக்கள் முன் நிறுத்துவதற்கு எந்தவித சட்டத்தையும் கடைப்பிடிப்பது இல்லை.

எதற்காக நான் ஒட்டு அளிக்கிறேன், என்னுடைய சார்பாக என்னுடைய தேவைகளையும், கருத்துக்களைச் சட்டசபையில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க நினைத்து நான் ஒட்டு அளிக்கிறேன். அவ்வாறு நான் ஒட்டு போடும் வேட்பாளர் தேர்தலில் தோற்றால் என்னுடைய வாக்கு சீட்டிற்க்கான அங்கீகாரம் எங்கே? என்னுடைய குரலை சட்டசபையில் பேசுபவர் யார்? தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு அளித்த மக்களின் குரல்கள் வெற்றி பெற்ற வேட்பாளரின் குரலால் நசுக்கப்படும், வெற்றி பெற்றவர் பெரும்பான்மை பலம் பெற்றவர்களின் குரல் என்றால், சிறுபான்மை பலம் பெற்ற ஒடுக்கப்பட்டோரின் குரல் மவுனிக்க வேண்டியது தானா? இது தான் ஜனநாயகமா? இதற்குத் தான் நான் வாக்களிக்க வேண்டுமா?

உதாரணமாக இந்தத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவுகிறார். வெற்றி பெற்றவருக்கு இணையாகச் சதவீதத்தில் இவரும் வாக்குகள் வாங்குகிறார், இவருக்கு ஓட்டுப் போட்ட மக்களின் குரல்கள் சட்டசபையில் ஒலிக்காது, அதற்குக் காரணம் அவர் வெற்றி பெறவில்லை. இதில் இருக்கும் சிக்கல் ஜனநாயக மாண்புக்கு உட்பட்டது தானா?

என்னுடைய வாக்குக்கான மதிப்பு, நான் வாக்களிக்கும் அந்த வேட்பாளர் வெற்றி பெறவில்லை என்றால் குப்பைக்கு சமம் என்றால், நான் எதற்காக வாக்களிக்க வேண்டும்? இப்படி என்னுடைய வாக்குக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் நடைபெறும் ஒரு ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்க‌படும் மக்களாட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்.

மக்கள் அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றிற்கும் அங்கீகாரத்தை கொடுப்பதற்கான ஜனநாயக‌ வழியை வகுத்துக் கொடுத்துவிட்டு வாக்களிக்காதவர்களைக் குறை சொன்னால் பரவாயில்லை, ஆனால் நீ செலுத்தும் வாக்கு வெற்றி பெற்றவருக்கு என்றால் மதிப்பு, இல்லையென்றால் அது வெறும் "கைவிரல் மை" என்றால் எவருக்கும் அழியாத கைவிரல் மையைப் போட்டு அழகுப்பார்க்க‌ விரும்புவது இல்லை. வாங்கும் வாக்குகள் சதவீத அடிப்படையில் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பிரதிநித்துவம் கொடுக்கவேண்டும் என்ற முழக்கம் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தோழமையுடன்,
ஸ்டீபன்.

Sunday, May 15, 2016

கணினி-இல் வாட்சாப்ப் பயன் படுத்துவது எப்படி ?


கணினி-இல் வாட்சாப்ப் பயன் படுத்துவது எப்படி

  • எதாவது ஒரு வெப் ப்ரோசெர் திறக்கவும் ( இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் தவிர)
  • இந்த இனைய முகவரியை டைப் செய்யவும் https://web.whatsapp.com, கீழ் கண்ட திரை கிடைக்கும்


  • இப்போது உங்கள் மொபைல் போனில் வாட்சப்ப் திறந்து மெனுவில் வாட்சப்ப் வெப் என்பதை தெரிவு செய்யவும்

How to use WhatsApp on your PC, how to use WhatsApp on your laptop

  • இப்போது ஒரு ஸ்கேன் விண்டோ திறக்கும் அதை கணினி இல் உள்ள  QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்


How to use WhatsApp on your PC, how to use WhatsApp on your laptop

 

  • வெற்றிகரமாக வெப் வாட்ச்சப் இல் லாகின் பண்ணியாச்சு

How to use WhatsApp on your PC, how to use WhatsApp on your laptop

  • இனி என்ன எல்லாம், மொபைல் ல இருக்கறது போல தான்....... பயன்படுத்தி மகிழுங்கள்.