Friday, May 13, 2016

புனித மிக்கேல் அதிதூதர் ஜெபம்

தூய மிக்கேல் அதிதூதரே, வானுலக சேனைத் தளங்களின் அதிபதியே / சதா ஜீவ அரூபிகளில் மகிமைப் பிரதாபம் நிறைந்த சம்மனசானவரே / அவர்களிலும் உத்தமமானவரே / உன்னத கடவுளின் மந்திராலோசனை நிர்ணயப் பெட்டகமே / தேவ கட்டளைப்படியே பரலோக வாசலைத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் உள்ள வானவரே / தேவநீதி சிம்மாசனத்தண்டையில் எங்கள் ஆத்துமாக்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே / மரண அவஸ்தப்பைடுகிறவர்களுக்கு உதவி செய்ய தீவிரித்தோடிவரும் உபகாரியே / மரித்தவர்களின் ஆத்துமங்களை அழைத்துக் கொண்டு போய் திவ்ய கர்த்தரின் சந்நிதியில் சேர்ப்பிக்கும் காவலரே / பலவீனனும் நிர்ப்பாக்கி யனுமாகிய அடியேனைக் கிருபாகடாட்சமாய் பார்த்து என் ஜீவிய காலம் முற்றிலும் விஷேசமாய் மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறேன். உலகம் உடல் அலகையுடன் போர்புரியும் ஆற்றலை எமக்களித்து அலகையின் சூழ்ச்சிகளிலிருந்து எம்மைக் காத்தருளும் இறைவனுக்கு நிகர் யார்? எனக் குரலெழுப்பி, அலகையின் கொட்டத்தை அடக்கி, நித்திய நெருப்பில் தள்ளிய வானதூதரே, எங்கள் இறுதி நாளில் எங்களைக் கைவிடாமல் காத்தருளும், மேலும் இறைவனிடம் பரிந்து பேசி எங்களுக்குத் தேவையான வரங்களைப் பெற்றுதாரும். இறுதியில் அவரை உம்முடன் முடிவின்றி கண்டுகளிக்க உதவி செய்யும். ஆமென்.

No comments:

Post a Comment