புதுமைகள் புரிய அருள்பெற்ற
புனித அந்தோனியாரே எங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம்
விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப்
பெற்றுத்தாரும். குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும் பேறுபெற்ற புனித அந்தோணியாரே, துன்பப்படுவோருக்கு
துணைபுரியும் வள்ளலே, ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அன்புடன்
அரவணைக்கும் நேசத் தந்தையே, இதோ உமது மன்றாட்டின் பயனை உணர்ந்து, அசைக்க முடியாத முழு
நம்பிக்கையுடன் உமது திருத்தலத்திற்கு வந்து கூடியுள்ளோம். நீர் ஏந்தியுள்ள
குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி,
எம் ஆன்மாவுக்கும் உடலுக்கும்
வேண்டிய வரங்களைப் பெற்றுத்தாரும். இறையருளை நிரம்பப் பெற்ற புனித அந்தோனியாரே, நாங்கள் உம் வாழ்வைப்
பின்பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையே அன்பு
செய்யவும், அவருக்காகவே வாழவும் எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும். நாங்கள் வந்தடைய எங்களுக்கு இறையருளைப் பெற்றுத்தாரும்.
எங்கள் பாதுகாவலரான புனித
அந்தோனியாரே, மகிமையில் விளங்கிடும் புனித லீலியே, துன்பப்படுவோரின் துயர்
துடைப்பவரே, அழுவோரின் ஆறுதலே, உம்மை நாடிநிற்கும் எங்களை உம்
அன்பால் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும். துன்ப துயரங்களிலிருந்து எங்களைக்
காப்பாற்றும். வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல
வலிமையைப் பெற்றுத் தாரும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ
வழிஅறியாதோர்க்கு வழிகாட்டும். எங்கள் குடும்பங்களையும், வேலைகளையும், நிலங்களையும் பாதுகாத்தருளும்.
நீங்காத நோய்நொடிகளை உமது வேண்டுதலால் எங்களிடமிருந்து நீக்கியருளும். ஆமென்.
No comments:
Post a Comment